உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...
வெண் சோறு நாம்
உண்ண
வேகும் வெயிலில்
உயிர் தரித்து
வெள்ளாமை வெட்டும் வரை
உடம்பின் ஈரம் உருக நிற்பர்
சோற்றுக்கு நெல் தந்து -அடுத்த
நாற்றுக்கும் வழி இழந்து
மாற்று வழி காணாமல்
நேற்று முதல் நாளை வரை
நூற்று அளவு காசை வைத்து -அவன்
நாற்றை நாட்டினால் பட்டினிச் சாவு
வயிற்றை நிரப்பினால் உழவுக்கு சாவு
அவன் அறுக்கும் வைக்கோலில்
பிறக்கிறது வசந்தம்
அவன் கழுத்தை
அறுக்கிறது புத்தாண்டு எனும்
அழுத்தம்
-என்றாலும் இன்றாலும் வாழட்டும் உளவு உயரட்டும் உழவன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக